மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’ எல்.முருகன் பேட்டி.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. சந்திக்க களத்தை தயார் செய்து வருகிறது. நான் போட்டியிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டால், நிச்சயமாக போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி வர உள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சேலத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் விருப்ப மனு வாங்குவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம். வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட சட்டங்களை கொண்டு வந்து விட்டு, மக்கள் மத்தியில் போலியான நாடகத்தை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகள் நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அதை கொண்டு வந்தது பா.ஜ.க.தான்

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து