மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போன் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள சபரி கார்டன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 32). இவர், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சாமிரெட்டி கண்டிகை பகுதியில் தொழிற்சாலையின் பஸ்சுக்காக ரோட்டில் காத்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், ராஜ்குமாரின் கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரதி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை