மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் செல்போன் கடையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டியில் செல்போன் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலை தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் தீபன் (வயது 25). செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு தீபன் சாப்பிட சென்றார். அப்போது மின்கசிவு காரணமாக கடைக்குள் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், கடையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை