சீனாபுரம் சந்தையில் மாடுகள் விற்பனை நடந்தபோது எடுத்த படம். 
மாவட்ட செய்திகள்

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

தினத்தந்தி

சீனாபுரம் சந்தை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 50-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விற்பனைக்காக வந்திருந்தன.

ரூ.70 லட்சம்

நேற்றைய சந்தையில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மாடுகள் மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை, வெள்ளோடு, காஞ்சிக்கோவில், திங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.

விலையில்லா மாடு

மேலும் நம்பியூர் ஒன்றியம், தாழ்குனி ஊராட்சியை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு, அரசின் விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை வாங்குவதற்காக ஈரோடு கால்நடை துறை டாக்டர்கள் நேற்று சீனாபுரம் மாட்டுச்சந்தைக்கு வந்திருந்தனர்.

அங்கு, பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்குவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அவர்கள் விலைபேசி பிடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து