மாவட்ட செய்திகள்

தளவாய்புரம் பள்ளிக்கூடத்தில் இடிந்து விழும் நிலையில் சத்துணவுக்கூடம்

தளவாய்புரம் பள்ளிக் கூடத்தில் சத்துணவுக்கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தினத்தந்தி

தளவாய்புரம்,

தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அண்ணா கலையரங்கம் அருகே இருக்கிறது. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்துணவுக்கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு செய்ய அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.அந்த கட்டிடத்தில் தான் சத்துணவுக்கூடம் தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால் பழைய சத்துணவுக் கூடம் இன்னும் அப்படியே அபாய நிலையில் உள்ளது. இங்கு பலத்த மழை அல்லது காற்று அடித்தால் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது.

வேண்டுகோள்

இந்த கட்டிடம் அருகே பள்ளி மாணவ- மாணவிகள் சிலர் விளையாடி வருகின்றனர். எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பழைய சத்துணவு கூடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்