மாவட்ட செய்திகள்

வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதையொட்டி போடிமெட்டு சோதனை சாவடியில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

போடி:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் கேரள-தமிழக எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடி மெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

டிரைவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கோழி மற்றும் கால்நடை தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து