மாவட்ட செய்திகள்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்றம் அளிப்பதால் பொதுமக்கள் தவிப்பு

சென்னையில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் ஆறுதல் அளித்து வந்த ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்றம் அளிப்பதால் பொதுமக்கள் தவிப்படைந்து உள்ளனர். தலைநகரின் சாபம் எப்போது தீருமோ? என்று ஏக்கத்தில் உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கோடைக்காலம் என்றாலே கொளுத்தி எடுக்கும் வெயிலும், விசுவரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் சென்னை நகரின் தலைவிதி என்றாகி விட்டது. பருவமழை ஏமாற்றியதால் ஏரிகள் வறண்டு போனது. கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை எடுக்கும் நிலையும் அமைந்துபோனது. விவசாய கிணறுகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு போதிய நீர் வழங்கமுடியாத சூழல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருவாரியான பகுதிகளில் வீட்டு குழாய்களும், அடிபம்பு குழாய்களும் வலுக்கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால், தற்போதைய நிலையில் தண்ணீர் லாரிகள் மட்டுமே மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து