மாவட்ட செய்திகள்

சிவகாசியில் வங்கியில் திடீர் தீ; பொருட்கள் சேதம்

சிவகாசியில் உள்ள அரசு வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தினத்தந்தி

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் அருகில் அரசு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நேற்று காலை 8 மணிக்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. வங்கியில் இருந்து கரும்புகை வெளியே வந்ததை தொடர்ந்து வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கியின் கதவை திறந்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வங்கியில் இருந்து மேஜை, நாற்காலி மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை எரிந்து நாசமானது. வங்கியில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்த சிவகாசி டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவகாசி பஸ் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து