மாவட்ட செய்திகள்

தீயணைப்பு வீரர் பலி

கம்பம் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு வீரர் பலியானார்.

தினத்தந்தி

உத்தமபாளையம்:

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் சத்தியமூர்த்தி (வயது 26). இவர் சின்னமனூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அனுமந்தன்பட்டி அருகே வந்த போது சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது அவருடைய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து