மாவட்ட செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கடும் பாதிப்பு பள்ளிபாளையத்தில் வைகோ பிரசாரம்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று திறந்த ஜீப்பில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-தற்போது தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம், பொள்ளாச்சி விவகாரம் பற்றி பார்த்தால் தமிழகம் எங்கோ போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று கூறிய பிரதமர் மோடி 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக கூறியவர் 15 ரூபாய் கூட தரவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே வேட்பாளர் கணேசமூர்த்திக்கு வாக்களித்து ராகுலை பிரதமர் ஆக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை