மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி ஓட்டல் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தினத்தந்தி

உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் சூசை நாதன் (வயது 60). இவர் செங்கல்பட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் கட்டியாம்பந்தல் கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை