மாவட்ட செய்திகள்

மாதவரத்தில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது ரூ.10 லட்சம் மெத்தைகள் தீயில் எரிந்து நாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மெத்தைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை மாதவரம் தபால்பெட்டி அருகே உள்ள குடோனில் இறக்குவதற்காக நேற்று காலை வந்தது.

செங்குன்றம்,

குடோன் நுழைவு வாயிலில் திரும்பியபோது மேலே சென்ற மின்கம்பியில் லாரி உரசியது. இதனால் லாரி தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம், செம்பியம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய மெத்தைகள் தீக்கிரையாகின. விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு