மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

சென்னை அண்ணா நகரில், பாலியல் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ் (வயது 40). முன்னதாக இவர், தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக்கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் இளம்பெண் ஒருவர், தான் பள்ளியில் பயின்றபோது விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர் அழைத்து செல்லும்போது தனக்கு கராத்தே மாஸ்டர் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். நேற்று இன்ஸ்பெக்டர் லதா, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினார். கராத்தே மாஸ்டர் கெபிராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்