மாவட்ட செய்திகள்

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா 5 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பல்லாவரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பல்லாவரம், சங்கர்நகர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கஞ்சா விற்பனை பெருகி உள்ளது.

குறிப்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள சேலையூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு தாம்பரம் ரெயில்வேகேட் பகுதி, ரெயில்வே மைதானம், கிறிஸ்தவ கல்லூரி வெளி வளாக பகுதி, இந்திய விமானப்படை சாலை, அகரம் சாலை, திருவஞ்சேரி, அகரம் சாலையில் பாரத் பல்கலைக்கழகம் வெளி பகுதிகளில் இந்த கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

SCROLL FOR NEXT