மாவட்ட செய்திகள்

குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களுக்கான நுழைவு தேர்வு

குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடைபெற்றது.

தினத்தந்தி

கடலூர்,

தமிழகம் முழுவதும் குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 547 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம்(ஏப்ரல்) தொடங்க இருக்கிறது.

இந்த பயிற்சியில் சேர மொத்தள்ள 100 இடங்களுக்கு 225 பேர் விணப்பித்து இருந்தனர்.

இவர்களில் சிறந்த மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவு தேர்வு நேற்று மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் விஜயலட்சுமி மேற்பார்வையில், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மைய நூலக அலுவலர் ராஜேந்திரன், 2-ம் நிலை நூலகர் சந்திரபாபு, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், பிரபாகரன் ஆகியோர் தேர்வை கண்காணித்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற முதல் 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நூலக அதிகாரி தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து