மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா ரத்து

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கோவில்கள் மூடப்பட்டு உள்ளன.

இதனால் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறுவதாக இருந்த பங்குனி உத்திர பெருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோவிலில் ஆகம விதிப்படி நித்திய பூஜைகள் நடைபெறும். அரசின் மறு உத்தரவு வரும்வரை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவையொட்டி நகரமே மக்கள் நடமாட்டமின்றி உள்ளதால் கோவிலில் உள்ள உற்சவ சிலைகள் மற்றும் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு மிக அவசியமாகின்றது.

எனவே, இக்கோவிலின் அவசர அவசியம் கருதி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்