மாவட்ட செய்திகள்

திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு திடீர் ஆய்வு

திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு திடீர் ஆய்வு.

தினத்தந்தி

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ஸ்டாலின். இவர், திடீரென திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தார். பணியில் இருந்த போலீசாருக்கு வந்திருப்பது மாஜிஸ்திரேட்டு என்பது உடனடியாக தெரியவில்லை.

பின்னர்தான் அவர் மாஜிஸ்திரேட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு ஆய்வு செய்தபோது அங்கு 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஆகியோர் அமர வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் எதற்காக அங்கு அமர வைக்கப்பட்டு உள்ளனர்? என கேட்ட மாஜிஸ்திரேட்டு, அவர்கள் தொடர்பான ஆவணங்களுடன் இன்ஸ்பெக்டர் தன்னை வந்து பார்க்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை