மாவட்ட செய்திகள்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குளம் போல் காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில்: குளம் போல் காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கற்பகம்பாள் நகரில் செல்வ விநாயகர் கோவில் அருகே பேரூராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையில் பூங்கா முழுவதும் தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது. புதர்மண்டி காணப்படுகிறது.

பூங்காவில் உள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து காணப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குளமாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து