மாவட்ட செய்திகள்

நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள நாராயன பெருமாள் கோவிலில் கோபுர விமான சுதை, சிற்ப பஞ்சவர்ண வேலைகள் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

நேற்று காலை 2-வது கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை உள்பட பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, மேளதாளங்களுடன் கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து நாராயண பெருமாள் கோவில் விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை