மாவட்ட செய்திகள்

மஞ்சூர் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு - வனத்துறையினர் விசாரணை

மஞ்சூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின் படி உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், குந்தா வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியில் சுருக்கு கம்பி வைக்கப்பட்டிருந்ததும் அதில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியின் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் நந்தினி, ஸ்ரீநிதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இறந்து கிடந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்புலி என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை