மாவட்ட செய்திகள்

பெண்ணாடம் அருகே: சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பெண்ணாடம்.

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஆலை நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கடந்த 23-ந்தேதி முதல் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த 24-ந்தேதி ஆலை வளாகத்திலேயே சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தொழிலாளர்களுடன் ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இவர்களது போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று ஆலையின் பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், 2017-18-ம் ஆண்டு போனஸ் மற்றும் சேமிப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆலைவளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து