மாவட்ட செய்திகள்

கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயற்சி செய்து உள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, சத்தியவாணிமுத்து நகர் உதயகுமார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவர், செம்பியம் அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். மர்மநபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

மேலும் அருகில் இருந்த அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் முடியாததால் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து 25 செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

கரையான்சாவடியில் உள்ள மற்றொரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ரூ.78 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து