புதுக்கோட்டை,
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. அவ்வாறு அனுமதி அளித்தால், ஆன்-லைன் மூலம் அனுப்பி வைக்கும் போது மருந்துகள் மாறி விடுவதற்கும், காலக்கெடு முடிந்த மருந்துகளை அனுப்பி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் வயாகரா, தூக்க மாத்திரைகளை மாணவ மாணவிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.எனவே ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று மருந்து கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.