திண்டுக்கல்:
தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யும்படி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் அறிவுறுத்தினார். இதையடுத்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குடியரசு தினத்தில் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 67 கடைகள், 44 உணவு நிறுவனங்கள், 15 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 126 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 45 கடைகள், 33 உணவு நிறுவனங்கள், 45 கடைகள், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 90 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் தேசிய பண்டிகை சிறப்பு விடுமுறை சட்டத்தின் கீழ் விடுமுறை அளிக்காமல் செசயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.