மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்

செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுழற்சி முறையில் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிகின்றனர்.

செவிலியர் தினத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து தங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் மறந்து அங்கேயே பணிபுரிந்து வரும் அவர்களை பாராட்டும் விதமாக திருப்பத்தூர் பொதுமக்கள் அனைத்து செவிலியர்களுக்கும் ரோஜா பூ மாலை அணிவித்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள். அப்போது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன், டாக்டர்கள் வேல்முருகன், பிரபாகரன், சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை