புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த நம்பிவரதன் மனைவி கலைவாணி (வயது 46). இவர் கடந்த 21.9.2015 அன்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு தொடர்பாக எந்த விவரமும் கிடைக்காமல் இருந்தது வந்தது. இதற்கிடையே அரும்பார்த்தபுரத்தில் வசித்து வந்த கலைவாணியின் தாயார் கிருஷ்ணவேணியும் மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இந்த கொலை சம்பவங்களில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.