மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் தனித்தனியே தாய், மகள் கொலை: ‘கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவிட்டேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

புதுச்சேரியில் தாய், மகளை கொலை செய்த வழக்கில் கைதானவர் தெரிவித்த தகவலின்பேரில் 47 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவு செய்ததாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த நம்பிவரதன் மனைவி கலைவாணி (வயது 46). இவர் கடந்த 21.9.2015 அன்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு தொடர்பாக எந்த விவரமும் கிடைக்காமல் இருந்தது வந்தது. இதற்கிடையே அரும்பார்த்தபுரத்தில் வசித்து வந்த கலைவாணியின் தாயார் கிருஷ்ணவேணியும் மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இந்த கொலை சம்பவங்களில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை