மாவட்ட செய்திகள்

ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் விளாத்திகுளம் வந்தார்

ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் விளாத்திகுளம் வந்தார்

தினத்தந்தி

விளாத்திகுளம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அங்கு தனது தாய் ராஜேஸ்வரி வீட்டில் 30 நாட்கள் தங்குகிறார். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் என மொத்தம் 20 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

குடும்பத்தினரை தவிர மற்ற நபர்களை சந்திக்கக்கூடாது, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து