மாவட்ட செய்திகள்

அண்ணாநகரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி கைது

அண்ணாநகரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் ரவுடி லெனினை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை அண்ணாநகர், டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 48). தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணவன், மனைவி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி லெனினை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அண்ணாநகர் பகுதியில் லெனின் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அண்ணாநகர் போலீசார் லெனினை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்த உடன் தப்பிக்க முயன்ற லெனின் மேம்பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை