மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் சங்கரி (வயது 17). இவர் கவரைப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சங்கரி, திடீரென மின்விசிறியில் புடவையை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை