மாவட்ட செய்திகள்

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

கடலூர்,

கடலூரில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் தாழங்குடா பகுதியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேல் எழுந்து, ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமார் 30 அடி தூரத்துக்கு அலைகள் கரையை தாண்டி வந்தன. மேலும் கடல் சீற்றத்தால் தாழங்குடாவில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

மண் அரிப்பு

இதற்கிடையே கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை டிராக்டர்கள் மூலம் இழுத்து சென்று மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இதேபோல் தேவனாம்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் சில்வர் பீச்சுக்கு சென்ற பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை