பெரம்பலூர்,
பெரம்பலூர் தாலுகாவிற்கு இன்று (வியாழக்கிழமை) பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள ஸ்ரீ கவுதம புத்தர் காது கேளாதோர் சிறப்பு பள்ளியிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குன்னம் தாலுகாவிற்கு 16-ந்தேதி வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு 17-ந்தேதி பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
முகாமில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு உரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவேண்டும்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.