மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படும்: குமரகுரு எம்.எல்.ஏ. தகவல்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படும் குமரகுரு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குமரகுரு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் அனைத்து அரசு துறைகளிலும் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கும். மேலும் அனைத்து வீதிகளிலும் 100 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக வைபாளையம் கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்