மாவட்ட செய்திகள்

பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சி.நம்மியந்தல் கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கலசபாக்கம்,

சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையானது தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் சி.நம்மியந்தல் கிராமத்தில் இந்த பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பசுமை வழிச்சாலைக்காக எங்கள் பகுதியில் 150 ஏக்கர் நிலம் கைப்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுவார்கள் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு