மாவட்ட செய்திகள்

திருவலங்காடு அருகே 3 வீடுகளில் திருட்டு

திருவலங்காடு அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டிருந்தது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேணுகோபாலபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 59). விவசாயி. இவரது வீட்டில் 5 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் முனுசாமி (36) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் கிரிபாபு (38) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை போன்றவற்றை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். முனுசாமி, கிரிபாபு ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

வேணுகோபாலபுரம் ஊராட்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து தெருவில் உள்ள 3 வீடுகளில் தொடர் கொள்ளை குறித்து திருவலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து