மாவட்ட செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

தினத்தந்தி

வடபழனி முருகன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். 2-வது நாளான நேற்று உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரியுடன் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி ஆகியோர் செய்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து