அரவக்குறிச்சி,
நீங்கள் தாமரைக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் இரட்டை இலைக்குப் போடும் வாக்கு ஆகும். நீங்கள் போடும் வாக்கு அரவக்குறிச்சி தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வாக்குகள் ஆகும். அரவக்குறிச்சி தொகுதியில் மாணவ-மாணவிகளின் நலன்கருதி அரசு கலைக்
கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நான் அப்பளுக்கற்ற, எதற்கும் பயப்படாதவனாக, நேர்மையான, மக்கள் சேவகனாக இருப்பேன் என உறுதி கூறுகிறேன். என்னை நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. பிரமுகர் வி.வி.செந்தில்நாதன், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கோ.கலையரசன், ஈஸ்வரமூர்த்தி, எம்.ஜி.ஆர். மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.