மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள அரும்பாக்கம் பகுதியில் அதிகாரி லதா தலைமையில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த பஸ்சில் 3 பைகளில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 12 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழகக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்திய சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த

லோகேஷ் (வயது 23) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT