மாவட்ட செய்திகள்

‘ஆன்லைன்’ வழியாக வருமான வரி கணக்கை பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? டி.ஜி.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

வருமான வரி கணக்கை பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? குறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை ஆன்-லைன் மூலம் வருகிற 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்தவேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வருமான வரி கணக்குகளை ஆன்-லைன் வழியாக பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் மற்றும் வருகிற 31-ந் தேதிக்குள் இணையதளம் மூலமாக மட்டுமே தாக்கல் செய்வதின் அவசியத்தையும் வருமான வரி முதன்மை ஆணையர் சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் விளக்கி கூறினார். வருமான வரி சம்பந்தமான பல்வேறு அம்சங்களை வருமான வரி கூடுதல் ஆணையர் அமோல் பிகிர்தனே காணொலி காட்சி மூலம் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சி நிறைவில் கூடுதல் டி.ஜி.பி. சுனில்குமார் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னதாக கூடுதல் டி.ஜி.பி. சேஷசாயி வரவேற்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து