மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேரணி, மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெகன்ராயன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் கருப்பணன், மாவட்ட துணை செயலாளர் அசோக், அமைப்பு செயலாளர் கருப்பணன், தென்மண்டல செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்ற 15 பெண்கள் உள்பட 132 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்