செய்திகள்

காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம்

காந்தி ஜெயந்தி நாளில் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் நாளை (2-ந்தேதி) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-காஞ்சீபுரம்-திருமால்பூர், கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-திருத்தணி-அரக்கோணம், கடற்கரை-கடம்பத்தூர்-திருவள்ளூர், கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கடற்கரை-ஆவடி, கடற்கரை-பொன்னேரி, கடற்கரை-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை, ஆவடி-பட்டாபிராம் இடையே ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்