தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல்; பி.எஸ்.எப். படை நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு 24 பர்கானாஸ்,

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் நகரில் தராலி தக்ஷிண் படா பகுதியில் வசித்து வந்தவர் பகுல் காஜி (வயது 37). வங்காளதேச எல்லை வழியே சட்டவிரோத வகையில் வெள்ளி நகைகளை கடத்த முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6.8 கிலோ எடை கொண்ட கடத்தல் வெள்ளியை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.3.43 லட்சம் என கூறப்படுகிறது. இந்த கடத்தலுக்காக ரூ.1,000 பணம் கடத்தல்காரருக்கு கிடைக்கும் என அவர் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு