தேசிய செய்திகள்

கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு

கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தினத்தந்தி

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.எம்.மாணி. இவர் கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவராகவும், கடந்த 50 ஆண்டுகளாக பாலா தொகுதியில் தொடர்ச்சியாக உறுப்பினராகவும் இருந்து வந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜ.க வேட்பாளர்கள் உள்பட 13 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்