கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு: 3 கமாண்டோ வீரர்கள் பணி நீக்கம்

அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3 கமாண்டோ வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. 'இசட் பிளஸ்' பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16-ந்தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரைக்கொண்டு மோத முயன்றார். ஆனால் அவர் இடையியே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது அஜித் தோவலின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோவலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடந்து வந்தது. இதில் அஜித் தோவலின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 கமாண்டோ வீரர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை