தேசிய செய்திகள்

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்கு சாவடியில் இன்று வாக்களித்துள்ளார்.

இந்த உள்ளாட்சி தேர்தல் 3 கட்ட அடிப்படையில் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலில், அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடக்கிறது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.