தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. இதில் டெல்டா வகை கொரோனா மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரசாக உள்ளது. இந்த வைரஸ் கொரோனாவின் 3-வது அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் டெல்டா வைரஸ் பரவி உள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு புதிதாக டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது. இதனால், மராட்டியத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து