தேசிய செய்திகள்

கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்

கோவா மாநில காவல்துறை டிஜிபி நந்தா மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

தினத்தந்தி

பானஜி,

கோவா மாநில காவல்துறை டிஜிபி நந்தா மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பணி நிமித்தமாக டெல்லி சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரணாப் நந்தா, 1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு போலீஸ் அதிகாரி ஆவார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கோவாவுக்கு உள்துறை அமைச்சகத்தால் மாற்றப்பட்டார். பிரணாப் நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபியாக 2018-ல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்