தேசிய செய்திகள்

மங்களூரு அருகே கிணற்றில் குதித்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

மங்களூரு அருகே கிணற்றில் குதித்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கின்னிகோலி போலீஸ் எல்லைக்குட்பட்ட ராம்நகரை சேர்ந்தவர் உமேஷ் ஆச்சாரியா (வயது 62). இவர் கின்னிகோலியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவர் கின்னிகோலி ரேட்டரில் கிளப்பின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி இவர், நகைக்கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கின்னிகோலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உமேஷின் உடலை கைப்பற்றி மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை