தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்தித்துப் பேசுகிறார்.

தினத்தந்தி

மும்பை,

பிரதமர் மோடியை மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நாளை சந்திக்க உள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துவார் எனத்தகவல்கள் கூறுகின்றன. மராட்டியத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில் இது குறித்தும் இருவரும் ஆலோசிக்கலாம் எனத்தெரிகிறது.

முன்னதாக, மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தீர்ப்பளித்தது. இதையடுத்து, மராத்தா சமூகத்தினரை சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கிய வகுப்பினராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம் மூலமாக வலியுறுத்தி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து