தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல் நடைபெறும் மிசோரம் மாநில தேர்தல் அதிகாரி நீக்கம்

மிசோரம் மாநிலத்தில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த இனப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான புரு இன மக்கள் அண்டை மாநிலமான திரிபுராவில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தற்போது அங்குள்ள 6 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது, திரிபுராவில் உள்ள இவர்கள் மிசோரமில் உள்ள தங்கள் சொந்த தொகுதிகளில் வந்து வாக்களிப்பதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திரிபுராவில் உள்ள புரு இன மக்கள் அங்கிருந்தவாறே வாக்களிப்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஷாஷாங் அனுமதி அளித்தார். இதற்கு மிசோரமில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஷாஷாங்குக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

இதைத்தொடர்ந்து மாநில அரசுடன் தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஷாஷாங்கை மாற்றி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மிசோரமின் புதிய தேர்தல் அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை