தேசிய செய்திகள்

இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும் வழங்கப்படாது : உள்துறை அமைச்சக அதிகாரிகள்

இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும் வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தின் படி, யாருக்கும் தானாக குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது பற்றி கூறும் போது, புதிய சட்டத்தின் மூலம் சட்ட விரோத குடியேறிகள் அனைவருக்கும் தானாகவே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு விடும் என்று அர்த்தம் இல்லை.

சட்ட விரோதமாக குடியேறியவர்கள், குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் உரிய அதிகாரிகளால் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்